கிராண்ட் மாஸ்டர் செஸ் பட்டம் வென்றார் தமிழக வீரர் சசிகிரண்
சென்னை:
சென்னையில் நடைபெற்று வந்த பென்டமீடியா கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் சசிகிரண் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் யூல்தசவேவை சசிகிரண் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் இப்போட்டியில் 9.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.
இரண்டாவது இடத்தை கஜகஸ்தான் வீரர் விளாதிமிரோவ் பெற்றார். அவர் 9 புள்ளிகள் பெற்றார். 3-வது இடத்தை இந்திய வீரர் பிரகாஷ் பிடித்தார்.அவர் பெற்ற புள்ளிகள் 7.
முதலிடம் பெற்ற சசிகிரணுக்கு பரிசுத் தொகையாக ரூ.90 ஆயிரம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர்ஏ.சி. முத்தையா பரிசுகள் வழங்கினார்.
பிடே ரேட் ஓபன் செஸ் போட்டி:
கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட பிடே ரேட் ஓபன் செஸ் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி மாணவர் அரவிந்த் சாம்பியன்பட்டம் பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த 13-வது சுற்றின் முடிவில் அவர் 10.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தை ஆந்திராவைச் சேர்ந்தராமகிருஷ்ணாவும், 3-வது இடத்தை சாந்தாராமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அரவிந்துக்கு ரூ. 8 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications