For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷவாயு தாக்கி 2 மாநகராட்சி ஊழியர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் விஷ வாயு தாக்கி மாநகராட்சி ஊழியர்கள் இருவர் இறந்தனர்.

சென்னை இந்திரா நகர் எல்.பி ரோடு 65-வது அவின்யூ பகுதியில் கழிவுநீரகற்று வாரியத்துக்கு சொந்தமானநீரேற்று நிலையம் இருக்கிறது. இந்திரா நகர் பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடைதண்ணீர் இந்த நீரேற்று நிலையத்துக்கு வந்து சேருகிறது.

அங்கு இருந்து அந்த நீர் ராட்சத பம்ப்செட் மூலமாக இறைக்கப்பட்டு பெருங்குடியில் உள்ள சுத்தரிப்புநிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு நன்கு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் கடலுக்கு அனுப்பப்படுகிறது.

கழிவுநீர் வந்து சேருவதற்காக இந்திரா நகர் நீரேற்று நிலையத்தில் 4 பெரிய கிணறுகள் உள்ளது. முதல் கிணறில்விழும் தண்ணீர் , இரண்டாவது கிணற்றுக்கு பாய்ந்து 4 கிணறுகளுக்கும் சென்று வரும்படி அந்தக்கிணறுகள்அமைக்கப்பட்டு உள்ளன.

4 வது கிணற்றில் இருந்து ராட்சத பம்ப்செட் மூலம் சாக்கடை தண்ணீர் இறைக்கப்பட்டு பெரும் குடிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் சுமார் 30 அடி ஆழம் உள்ளவை.

முதல் கிணற்றில், தண்ணீரின் அளவை காட்டுவதற்காக அளவு கோல் ஒன்று பொறுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமைநடந்தது. இதற்காக சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் , வில்லவன், மூர்த்தி ஆகிய மூன்று பேரும்முதலாவது கிணற்றில் இறங்கினார்கள்.

கிணற்றுக்குள் இறங்கி 15 அடி ஆழத்தில் அளவுகோலை பொருத்திக் கொண்டு இருந்த பொழுது சாக்கடையில்இருந்து கிளம்பிய விஷவாயு அவர்களைத் தாக்கியது. இதில் வில்லவன், பாஸ்கர் ஆகியோர் மயக்கம் அடைந்துஒருவர் பின் ஒருவராக கிணற்றுக்குள் விழுந்தனர்.

மேலே நின்று அவர்களுக்கு உதவிக் கொண்டு இருந்த மூர்த்தி, கிணற்றுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்றமுயன்றார். தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தார். கிணற்றுக்குள் சாக்கடைத் தண்ணீர் அதிகமாகவந்ததால் இருவரின் உடல்களையும் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ,இருவரது உடலும் மீட்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X