For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். 70 பேருக்குமேல் காயமடைந்தனர்.

மின் கட்டண உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சியினர் ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும்,போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சட்டப்பேரவையை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலம் நடத்த அவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்குப்போலீஸார் அனுமதி தரவில்லை.

இதையடுத்து தடை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.பதிலுக்குப் போலீஸார் மீது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கல்வீச்சு நடத்தினர்.

கல்வீச்சு தீவிரமடைந்ததை அடுத்து கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களும்போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 போலீஸார் உள்பட 3 பேர் இறந்தனர். போலீஸ் தடியடியில் 70 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X