கு.க.வுக்குப் பின்னும் குவாகுவா"

Subscribe to Oneindia Tamil

சேலம்:

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த பெண், அரசுமருத்துவமனை மற்றும் அரசு ஆகியோர் உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினம் அருகே உள்ள கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி (30). இவரதுமனைவி விஜயா (27). இவர்களுக்குத் தாமரை (8), பிரியா (6) மற்றும் முருகன் (3) என்ற மூன்று குழந்தைகள்உள்ளனர்.

முருகன் பிறந்த பின்னர் விஜயா குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கானசான்றிதழையும் பெற்றார். ஒரு வருடத்திற்குப் பின்னர், மீண்டும் விஜயா கர்ப்பமுற்றார். இதனால் அதிர்ச்சியடைந்ததம்பதியினர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களிடம் புகார் கூறினார்.

டாக்டர்கள் சில கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த மாத்திரைகள்சரியாக வேலை செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி விஜயா இரட்டை ஆண் குழந்தைகளைப்பெற்றெடுத்தார். இதில் ஒன்று ஆகஸ்ட் 27ம் தேதி காலை இறந்து போனது.

தற்போது இந்த தம்பதியினர், சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யாத டாக்டர்கள் மற்றும் அரசு நிர்வாகம்மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் சுகாதாரத் துறைஅமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+