ஒரே பிராண்டில் ஆயத்த ஆடை ... ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு
கோவை:
ஒரே "பிராண்டில் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியைஅதிகரிக்கவும், போட்டியை எதிர்கொள்ளவும் இச்சங்கம் தயார்படுத்தி வருகிறது.
திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் யுனிடா அமைப்புகள் இணைந்து கருத்தரங்கு ஒன்றை கடந்த இரண்டு நாட்களாக நடத்தியது. இந்த கருத்தரங்கில்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக 40 பேர் கலந்து கொண்டனர்.
இதில், அனைவரும் இணைந்து ஒரு பொதுவான பெயரில் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுப் பெயரை உருவாக்க தேசிய வடிவமைப்புநிறுவனம் உதவுகிறது.
சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது. பத்து நிலைகளில் இந்த பொதுப் பெயரில் ஏற்றுமதி மேம்படுத்தப்படும். முதலாவதாகபொதுவான இடத்தில், ஆயத்த ஆடைகள் சோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த பிராண்ட் நேம் மூலம் ஏற்றுமதி செய்ய விரும்பும் ஏற்றுமதியாளர்களுக்கென புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும். தகுதி வாய்ந்தஏற்றுமதியாளர்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.