காஷ்மீரில் 2 கொடிய தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட இரு கொடிய பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் போலீஸார்கைது செய்தனர்.
அமர்நாத் யாத்ரிகர்கள் கொலை வழக்கிலும், சட்டிசிங்போராவில் சீக்கியர் குடும்பத்தினர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று ஐஜிஎஸ்.எஸ். கில் தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்கள் ராஜோரி பகுதி வழியாக காஷ்மீருக்குள் நுழைந்துள்ளனர். இந்தியமாணவர்கள் என்ற போர்வையில் இருவரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
லக்லேஷர்-இ-டைபா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்கள், அனந்நாக்கில் கைதுசெய்யப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications