குண்டு வெடிப்பு: மதானிக்கு ஜாமீன் இல்லை

Subscribe to Oneindia Tamil

கோவை:

உடுமலையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மதானியின் ஜாமீன்மனு தள்ளுபடியானது.

கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் கடந்த 97ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைக்கிள் குண்டு வெடித்தது. வணிக வளாகம்முன் நடந்த இந்த சம்பவத்தில் 3 பேர் இறந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை தனி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேர் செப்டம்பர் 4ம் தேதி (இன்று) ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கை நீதிபதிதணிகாசலம் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மதானியின் ஜாமீன் தள்ளுபடி:

கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் மதானி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிகோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அப்துல் நாசர் மதானி தனக்கும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கும்தொடர்பு இல்லை.

வெறும் தொலைபேசி பேச்சை மட்டுமே வைத்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் தனக்கும் தனதுஆதரவாளர்கள் 9 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தனிநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தணிகாசலம் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+