Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரோகம் செய்வதா..? 55 வயது "காதலி"யைக் கொன்ற 75 வயது "வாலிபர்"

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கருதி தான் காதலித்த பெண்ணைக் கொலை செய்த 75 வயது முதியவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது பற்றிக் கூறப்படுவதாவது:

பஞ்சாப் மாநிலம் அமிர்த்சரஸைச் சேர்ந்தவர் நிரஞ்சன் சிங். 75 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்குத் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், 4 குழந்தைகளுக்குத் தாயான சரண் கவுர் என்ற பெண்ணை, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார் நிரஞ்சன் சிங். அமிர்தஸரசுக்கு வந்த சரண்கவுருக்கு வீடு வாங்குவதற்காக தனது நிலத்தை விற்றுப் பணம் தந்து உதவினார் நிரஞ்சன் சிங்.

அப்போதே சரண் கவுரையும் அவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டார். நிரஞ்சன் சிங்குக்கும், சரண் கவுருக்கு இடையே 20 வயது வித்தியாசம். ஆனால், சரண்கவுர் மனதில் நிரஞ்சன் சிங் மீது காதல் ஏதும் இல்லை. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட வயதில் குறைந்த தர்பாரா சிங்கை அவர் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. (?)

பலமுறை காதல் தூது விட்டும் தன் மீது காதல் பார்வையை வீசாத சரண் கவுர் மீது நிரஞ்சன் சிங்குக்கு வருத்தம். இது தர்பாரா சிங்கை சரண் சிங் காதலிப்பதுதெரிந்து கோபமாக மாறியது.

தன்னைக் காதலிக்காமல் வேறு ஒருவரைக் காதலிக்கும் சரண் கவுரைக் கொலை செய்ய முடிவெடுத்தார் நிரஞ்சன் சிங்.

கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சரண் கவுரைச் சந்தித்து தன்னுடன் வரும்படி நிரஞ்சன் சிங் கூறினார். ஆனால் சரண் கவுர் மறுத்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த நிரஞ்சன் சிங் தான் கொண்டு சென்ற அரிவாளால் சரண் கவுரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்தார்.

தலையை அங்கேயே போட்டுவிட்டு, தலையில்லாத உடலை வீட்டுக்கு அருகே புதரில் வீசியிருந்தார் நிரஞ்சன் சிங்.

சரண் கவுரைக் கொலை செய்த குற்றத்துக்காக நிரஞ்சன் சிங்கைப் போலீஸார் கைது செய்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+