ரூ. 45 லட்ச மின்சாரம் திருடிய தொழிற்சாலை
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் மீது விசாரணை நடந்து வருகின்றது.
தமிழ்நாடு மின்சார வாரிய விழிப்புப் பணிகள் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவரின் தலைமையின் கீழும், கூடுதல் காவல்துறை இயக்குநரின்நேரடி பார்வையிலும் மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடந்து வருகின்றன.
சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலைகளில் மின்சார திருட்டு நடந்து வருவது குறித்து தகவல்கள் வந்தது. இதையடுத்து அங்குள்ளதொழிற்சாலைகளில் சென்னை வடக்கு மின் திருட்டுத்தடுப்பு குழுவினரால் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த திடீர் ஆய்வின் போது ஒரு கார்பனேட் தொழிற்சாலையில் மின்வாரியத்தின் மின்சாரத்தின் அளவு மீட்டரில் குறைவாக பதிவாகும்வண்ணம் தில்லுமுல்லு செய்து மின்சாரம் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த மின்சார திருட்டினால் அந்த தொழிற்சாலை அதிபர் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய இழப்புத்தொகை ரூபாய் 45 லட்சத்து 78ஆயிரத்து 640 ரூபாய் ஆகும். கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் இந்த மின்திருட்டு சம்பந்தமாக புகார் செய்யப்பட்டுள்ளது.விசாரணை நடந்து வருகிறது.