சீனாவில் வெடிகுண்டு லாரி வெடித்து 100 பேர் பலி
பெய்ஜிங்:
சீனாவில் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும்போது வெடித்துச் சிதறியது. இதில்100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
ஜின்ஜியாங் உய்கூர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
இந்த வெடிகுண்டுகள் அழிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த லாரி உருமி என்ற இடத்தில்சென்று கொண்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த 100 பேரின் உடல்கள்சிதறின.
பல வீடுகளும் இடிந்து விழுந்தன. 20 வாகனங்களும் வெடித்துச் சிதறி நொறுங்கின.
இந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை என சீனாவின் செய்தி நிறுவனமான ஷின்குவாதெரிவிக்கிறது.
சீனாவின் இந்தப் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தீவிரமான கம்யூனிஷகொள்கைகளும், அடக்குமுறைகளும் நிறைந்திருந்தாலும் அங்கும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது.
இந்தத் தீவிரவாதக் கும்பல்களில் ஒன்று தான் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் நிலவுகிறது.
ஜின்ஜியாங் மாகாணத்தை ஒட்டி தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய முன்னாள் சோவியத் நாடுகள் உள்ளன.இந்த நாடுகளிலும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்த தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானை ஆளும்தலிபான் தீவிரவாதிகளும் சேர்ந்து ஜின்ஜியாங் மாகாணத்துக்கு ஆயுதங்களைக் கடத்தி வந்து சீனாவின் இஸ்லாமியதீவிரவாதிகளுக்கு உதவி வருவதாக சீனா கூறி வருகிறது.