ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி: விரைவில் புதிய கொள்கை
திருப்பூர்:
ரெடிமேட் ஆடை தொடர்பாக புதிய ஏற்றுமதிக் கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்தக் கொள்கைதயாராகி வருகிறது என ஆயத்த ஆடை (ரெடிமேட்) ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் டைரக்டர் ஜெனரல் ராஜிவ் தாக்கூர்கூறினார்.
திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட ராஜிவ் தாக்கூர் கூறுகையில்,
அடுத்து வரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தையை கருத்தில் கொண்டு, ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கோட்டாவில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இதற்கென சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. 2000- 2004 வரை ஏற்றுமதி கோட்டா விதிமுறைகள்மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்கென அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் தங்களின் கருத்துக்களை சொல்லாம்.
இதே போன்று கப்பல்களில் சரக்கு அனுப்புவதிலும் புதிய கொள்கைகள் கடைபிடிக்கப்படவுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றவகையிலும், அவர்களது பொருட்களை எளிய முறையில் அனுப்பவும் மத்திய அரசு உதவி செய்யும்.
எப்போதுமே பொருந்தும் வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். அடிக்கடி ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம்கொண்டு வந்தால் ஏற்றுமதியாளர்களை அது வெகுவாகப் பாதிக்கும்.
மேலும், சர்வதேச சந்தைப் போட்டியைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்ராஜிவ்.












Click it and Unblock the Notifications