ஆங்கிலத்தில் படித்தால் அறிவு கூடும் என்கிறார் பழனிவேல் ராஜன்
ஈரோடு:
ஆங்கிலம் படித்தால்தான் மாணவர்களுக்கு ஆழ்ந்த அறிவும், வெளிநாட்டில்வேலையும் கிடைக்கும் என தமிழக சட்டசபை சபாநயகர் பழனிவேல் ராஜன்தெரிவித்தார்.
ஈரோட்டில் அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த கட்டடத் துவக்க விழாவில்தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் பழனிவேல்ராஜன் பேசியதாவது:
தமிழ் படித்தால் மட்டுமே உயர முடியும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்தமிழ்க்குடிமகன் கூறி வரும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது ஆங்கிலம்எல்லாவற்றிற்கும் அவசியமாகி வருகிறது. கம்ப்யூட்டர் கல்வி ஆங்கிலத்தில் இருந்தால்தான் உலகம் முழுவதும் சென்று பணியாற்ற முடியும்.
ஜெர்மன் நாட்டில் நமது நாட்டின் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் 20 ஆயிரம் பேர்தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தில் 10 ஆயிரம் பேர்தேவைப்படுகின்றனர். அமெரிக்காவில் நமது நாட்டின் சாஃப்ட் வர்இன்ஜினியர்களின் தேவை இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இவர்கள் தமிழை மட்டும் கற்றாலோ, தாய்மொழியில் இந்தப் பாடங்களை தெரிந்துகொண்டாலோ தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.
தமிழக முதல்வர், கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மாணவர்களின்எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே கல்லூரிகளில் 22 ஆயிரம் மாணவர்கள் கம்ப்யூட்டர் படிக்க இடம் உள்ளது.ஆனால் புதிதாக 17 ஆயிரம் பேர் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி படிக்கத்தேர்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
இவர்கள் ஆங்கிலத்தில் படித்தால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். எனவே,கம்ப்யூட்டர் கல்வியைப் பொறுத்தவரை ஆங்கிலம் கட்டாயம் தேவை. நான் இவ்வாறுபேசுவதால் தமிழுக்கு எதிரி அல்ல.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என இந்து முன்னணி கூறிவருகிறது. ஆனால், இதில் எனக்கு உடன்பாடில்லை. கோயில்களில் தமிழில் அர்ச்சனைசெய்வதில் எவ்வித தவறும் இல்லை என்று பழனிவேல் ராஜன் பேசினார்.
விழாவில் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி, எம்.எல்.ஏ., வெங்கிடு ஆகியோர்கலந்து கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications