அஸ்ஸாம் மாணவர்களின் எண்ணெய் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
கவுகாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் பெட்ரோலிய உற்பத்தியை நிறுத்த அம் மாநில மாணவர் அமைப்பினர் மேற்கொண்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அஸ்ஸாமில் உள்ளது அரசுத் துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனம். அஸ்ஸாம் மாநிலத்தில் பெட்ரோலியம் உற்பத்தி செய்து அவற்றை நாட்டின்மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது இந் நிறுவனத்தின் பணி.
இந் நிறுவனத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 300 இளைஞர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி120 மணி நேர போராட்டத்துக்கு அனைத்து அஸ்ஸாம் இளைஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.
பெட்ரோலிய உற்பத்திக்கு தடை விதிப்பது, பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது என்று முடிவு செய்து,திங்கள்கிழமை காலை முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆயில் இந்திய நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தினர். மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில்மாணவர்களுடைய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து தாங்கள் தொடங்கிய போராட்டத்தை திங்கள்கிழமை மாலை முதல் வாபஸ் பெற்றுக் கொள்வதாக மாணவர்கள் அறிவித்தனர்.
நாட்டின் மொத்த குரூட் ஆயில் உற்பத்தியில் கணிசமான அளவு அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின்போராட்டத்தால் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கவலைப்பட்டனர்.
இப்போது மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.ஐ.ஏ.என்.எஸ்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications