பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது பாக்.?
நியூயார்க்:
சர்வதேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் உடன்படாதுஎன்று கூறப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுடன் அதற்கு நிதியுதவியும் செய்து வருகிறதுபாகிஸ்தான் என்று ஏற்கனவே இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாகசமீபத்தில் நடந்த மில்லனியம் மாநாட்டிலும் பிரதமர் வாஜ்பாய் நேரடியாகவே குற்றம்சாட்டிப் பேசினார்.
இந்த நிலையில், தற்போது நியூயார்க்கிலுள்ள பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்முஷாரப், பயங்கரவாத தடுப்பு மற்றும் நிதியுதவித் தடுப்பு ஒப்பந்தத்தில்,கையெழுத்திட மாட்டார் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி கமலேஷ் சர்மாகூறுகையில், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என நான்நினைக்கவில்லை. ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்பதாக இருந்தால் அது எப்போதோதெரிந்திருக்கும் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை முஷாரப் அதில் கையெழுத்திடவில்லை.
சர்மா தொடர்ந்து கூறுகையில், அரசியல் தைரியம் இல்லாததாலேயே சில நாடுகள்இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கின்றன என்றார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.