ரூ.10 லட்சத்தில் திருவள்ளுவர் கோவில் புதுப்பிப்பு
சென்னை:
சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோவில், திருமண மண்டபம் ரூ 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.
இதுகுறித்து கண்ணியம்மன் கோவில் நிர்வாக அலுவலர் வெளியிட்ட செய்தி:
மயிலாப்பூரில் திருவள்ளுவர் அவதரித்த இடத்தில் திருவள்ளுவர் கோவில் உள்ளது. இதன் திருப்பணி தொடக்கவிழா செப்டம்பர் 18 ம் தேதி திங்கள்கிழமைநடக்கிறது.
திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபம் புதுப்பிக்கும் விழாவும், திருவள்ளுவர் நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் முப்பெரும் விழாவாகநடக்கும்.
அறநிலைத்துறை அமைச்சர் தமிழக்குடிமகன் இவ்விழாவைத் தொடங்கி வைக்கிறார். விழாவைத் தொடர்ந்து திருக்குறள் கருத்தரங்கம், நடைபெறுகிறது.இதில் வலம்புரி ஜான், ஈரோடு தமிழன்பன், க.சுப்புசாரதா, நம்பி ஆருரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
திருவள்ளுவர் கோவில் ரூ 5.6 லட்சம் மதிப்பிலும், திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபம் ரூ 4.6 லட்தம் மதிப்பிலும் புதுப்பிக்கப்பட உள்ளன என்றுகோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.