பளுதூக்குதல்: பதக்கத்தை நெருங்கி கோட்டை விட்டார் சனமாச்சா சானு
சிட்னி:
பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சனமாச்சா சானு தோற்றார்.
திங்கள்கிழமை நடந்த 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர் தனது சொந்தசாதனை அளவு எடையையே தூக்கவில்லை. இருப்பினும் வெண்கலப் பதக்கத்தைநெருங்கி வந்து அவர் அதைக் கோட்டைவிட்டார்.
இப் போட்டியில் சீனா வீராங்கனை யாங் ஸியா ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் மற்றம்மொத்தம் என மூன்று பிரிவிலும் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனமாச்சா சானு தோல்வியுற்றதை அடுத்து இந்தியாவின் பதக்க வாய்ப்பு மேலும்மங்கியது. இருக்கும் ஒரே வாய்ப்பு கர்னம் மல்லேஸ்வரிதான். அவர்செவ்வாய்க்கிழமை நடைபெறும் 69 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறார்.
ஏற்கெனவே ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் தாண்டவமூர்த்தி முத்துஏற்கெனவே தோற்றுவிட்டார். சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும்போட்டியில் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திங்கள்கிழமை நடந்த போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் சானு 87.5 கிலோ தூக்கத்தவறிவிட்டார். அதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க முடியாமல்போனது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications