தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் - சுவாமி
கரூர்:
தமிழகத்தில் இனிமேல் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கரூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கரூர் நடக்கும் ஜனதா கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கரூர் வந்திருந்த அவர் நிருபர்களிக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஜனதாக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடும். தமிழகம் முழுவதும் 50 தொகுதிகளில்போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
3 வது அணி உருவாக்குவது தொடர்பாக சோனியா காந்தியையும், மூப்பனாரையும் தொடர்பு கொண்டு வருகிறேன். மூப்பனார் திறமையானவர்.அனுபவம் வாய்ந்தவர். அவரால்தான் திறமையான ஆட்சியைத் தர முடியும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும். அந்தக் கூட்டணியில் கண்டிப்பாக ஜனதாக் கட்சி இருக்கும். ஜனதாக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும்தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
இங்குள்ள பல கட்சிகள் தமிழகத்தை 2 வது காஷ்மீர் ஆக்க முயன்று வருகின்றன. இதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., விடுதலைப்புலிகள் ஆகியவற்றின்கூட்டுத்தொடர்பும் உள்ளது என்றார் சுப்ரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications