வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு 24.8 மில்லியன் இந்தியர்கள் ஆதரவு
டெல்லி:
உலகம் முழுவதும் வன்முறைக்கு எதிராக யுனெஸ்கோ நடத்திய பிரச்சார உறுதி மொழிப் பத்திரத்தில்இந்தியாவிலிருந்து மட்டும் 24.8 மில்லியன் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
1999 ம் ஆண்டு யுனெஸ்கோ, வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக உலகம் முழுவதும் விழிப்புணர்வுபிரச்சாரம் நடத்தியது. இதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் மொத்தம் 50 மில்லியன் பேர்கையெழுத்திட்டுள்ளனர்.
பிரேசில் 5.9 மில்லியன் பேர், கொலம்பியா 11.7 மில்லியன் பேர், நேபாள் 0.9 மில்லியன் பேர், அல்ஜீரியா 0.7மில்லியன் பேர், மற்றும் இத்தாலியிலிருந்து 0.4 மில்லியன் பேரும் கையெழுத்திட்டுள்ளதாக யுனெஸ்கோவெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் இந்தியாவிலிருந்து மட்டும் 24. 8 மில்லியன் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.குறிப்பாக பிரம்ம குமாரிஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1999 ம் ஆண்டு மார்ச் மாதம் யுனெஸ்கோவும், மேலும் பல அமைதி விரும்பும் அமைப்புக்களும் இந்தப்பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தன. ஐக்கிய நாடுகள் சபை அமைதி வருடமாக அறிவித்துள்ள இந்த வருடஇறுதியில் இப்பிரச்சாரம் முடிவடையும்.
யுனெஸ்கோ அறிவித்த உறுதிமொழியின் சாராம்சம்:
1. அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு, 2. வன்முறையைக் கைவிடுவோம், 3. அனைவரையும் மதித்தல்,மரியாதையுடன் நடத்துதல், 4. புரிந்து கொள்ள முயற்சி எடுத்தல், பொறுப்போடு செயல்படுதல் 5. கருத்துசுதந்திரம், 6 பிறர் சுதந்திரத்தில் தலையிடாமை ஆகியவையாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications