இடம் மாற்றப்படும் ஒரிசா மிருகங்கள்
புவனேஸ்வர்:
ஒரிசா நந்தன்கானன் மிருகக்காட்சி சாலையிலிருந்து 43 வெள்ளை புலிகள் மற்றும் 25 சிங்கங்களை இந்தியாவிலுள்ள பிற மிருகக்காட்சி சாலைகளுக்குமாற்றத் திட்டமிட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஒரிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நந்தன்கானன் மிருகக்காட்சிசாலை. 1979 ம் ஆண்டுஅமைக்கப்பட்டது இந்த மிருகக்காட்சி சாலை. உலகிலேயே அதிக அளவு வெள்ளைப்புலிகள் உள்ளது இங்குதான்.
சமீபத்தில் இங்கிருந்த 13 வெள்ளைப்புலிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. அதையடுத்து ஒரு மானும் இறந்தது. தற்போது இந்த மிருகக்காட்சி சாலையில்யானைகள், புலிகள், சிங்கங்கள் மற்றும் குரங்குகள் உள்பட 1,300 க்கும் மேற்பட்ட மிருகங்கள் உள்ளன.
தற்போது, இங்குள்ள விலங்குகளை வேறு மிருகக்காட்சி சாலைகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக மத்திய மிருகக்காட்சி சாலை இயக்குநர் வினோத்குமார் தெரிவித்தார்.
சமீபத்தில் இங்குள்ள வெள்ளைப்புலிகள் இறந்தது குறித்து மத்திய அரசு அமைத்த உயர்மட்டக் குழு ஒன்று இந்த மிருகக்காட்சி சாலைக்கு வந்து விசாரணைநடத்தியது.
விசாரணையின் முடிவில் இங்குள்ள விலங்குகளை வேறு மிருகக்காட்சி சாலைக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில்இப்போது மிருகங்களை மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதன் முதல்கட்டமாக 12 மிருகங்கள் ஆந்திராவிலுள்ள திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம்மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன என்றார் வினோத் குமார்.
போராட்டம்:
இதற்கிடையே, நந்தன்கானன் மிருகக்காட்சி சாலையிலுள்ள விலங்குகளை வேறு மிருகக்காட்சி சாலைக்கு மாற்றினால் போராட்டம் நடத்துவோம் என்றுகாங்கிரஸ் எம்.எல்.ஏ லாலாடேன் முஹபத்ரா தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications