காரில் சிவப்பு விளக்கு: அமைச்சர் மகன் மீது வழக்கு
சென்னை:
கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாகனங்களில் மட்டுமே பொருத்தப்படும் சிவப்பு விளக்கை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தின் மகன், தனது காரில் பொருத்திக்கொண்டு சேலம் மாவட்டத்தை கலக்கிக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் நெடுஞ்செழியன், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருக்கிறார். வீரபாண்டி ஆறுகத்திற்குஅடுத்தபடியாக ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகமும் அரசு அலுவலகங்களும் நெடுஞ்செழியன் சொல்வதுபடியே இயங்கும் என்கிறார்கள். இது தவிரகட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.
தனது தந்தையைப்போலவே, நெடுஞ்செழியனும் தனது காரில் சிவப்பு விளக்கு பொருத்தியிருக்கிறார். இதை எதிர்த்து சேலம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர்வெங்கடாசலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், நீதிபதி போன்ற மிக முக்கிய பிரகர்கள் தான் காரில் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதி உள்ளது. ஆனால்சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் நெடுஞ்செழியனும், துணை மேயர் சுபாஷ் என்பவரும் தங்களது காரில் சிவப்பு விளக்குகளைபொருத்தியிருக்கிறார்கள்.
இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருக்கிறார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜன் இதனை டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பிவைத்து உத்திரவிட்டுள்ளார்.