ராஜ்குமாரை மீட்க காட்டுக்கு செல்கிறார் முன்னாள் அமைச்சர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரையும் கடத்தப்பட்ட பிறரையும் மீட்பதற்காக 500 பேருடன்சத்தியமங்கலம் காட்டுக்குப் போவதாக கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்எஸ்.ரமேஷ் கூறியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களான பங்காரப்பா மற்றும் வீரப்ப மொய்லிஅமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் ரமேஷ். பல திரைப்படங்களும்தயாரித்துள்ளார்.
ராஜ்குமாரை காட்டுக்குள் சென்று மீட்டு வரப் போவது குறித்து பெங்களூரில்செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நானும், 500 பேரும் சனிக்கிழமைசத்தியமங்கலம் காட்டுக்குள் செல்லவுள்ளோம். சொந்த ஊரான காஜனூரிலிருந்து 4கிலோமீட்டர் தொலைவுக்குள்தான் நடிகர் ராஜ்குமார் வைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் எம்.ஜி.சாலை காந்தி சிலை முன்பு எங்களது அமைதி யாத்திரைகிளம்புகிறது. கார்களில் மைசூர் சென்று அங்கிருந்து காட்டுக்கு செல்வோம்.
மைசூரில், தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ள அப்துல் கரீமைச் சந்தித்து சமாதானம் பேசுவோம்.
ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளதால், கன்னடத் திரையுலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.ராஜ்குமாரை மீட்க இரு மாநில அரசுகளும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications