குமரி அனந்தனுக்கு வந்த சோதனை!
சென்னை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் பெயர் வாக்காளர்பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவரால் புகைப்பட அடையாள அட்டைக்குபுகைப்படம் எடுக்க இயலவில்லை.
குமரி அனந்தன் சென்னை மாம்பலத்தில் வசித்து வருகிறார். அடையாள அட்டைக்குபுகைப்படம் எடுக்க முடியாதது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாம்பலத்திலுள்ள நாராயணா மிஷன் பள்ளிக்கு குடும்பத்துடன் புகைப்பட அடையாளஅட்டைக்கான புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தோம்.
அங்கே அடையாளத்திற்காக எனது வீட்டு ரேஷன் கார்டைக் காட்டினேன். ஆனால்தேர்தல் அதிகாரிகள் வைத்திருந்த பட்டியலில் எனது பெயர் மட்டும்இடம்பெறவில்லை. இதனால் என்னால் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது வீட்டின் முகவரி மாறியது குறித்து எனது மருமகன் எழுதிக் கொடுத்திருந்தார்.ஆயினும் எனது பெயர் விட்டுப் போய் விட்டது. அதேபோல எனது மருமகன்பெயரும் இடம்பெறவில்லை. ஆனால் அவரது மனைவியின் பெயர் உள்ளது.
வாக்குரிமைதான் ஜனநாயகத்தில் மிகப் பெரிய உரிமையாகும். அதை முறையாகவும்,எளிதாகவும் பெறுவதுதான் மக்களின் கடமை. எனவே அடையாள அட்டை வழங்கும்பணியை முறையாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியிருந்தார் குமரி அனந்தன்.