ராணுவத் தாக்குதலில் 9 விடுதலைப்புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேநடந்த தாக்குதலில் ஒன்பது விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தகவலை இலங்கை அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ஆரியரூபசிங்கே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நாகர்கோயில், நுனாவில் மற்றும் செம்மணி ஆகியபகுதிகளில் நடந்த தாக்குதலில் ஒன்பது விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும், விடுதலைப் புலிகளால் கடந்த 14-ம் தேதி டியூஷன் படிக்கச் சென்றவிஸ்வலிங்கம் விஜயலட்சுமி என்ற மாணவி விடுதலைப் புலிகளால் கட்டாயமாககடத்திச் செல்லப்பட்டார். அவர் தப்பி ராணுவ முகாமிற்கு வந்துள்ளார் எனவும் ரூபசிங்கே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications