For Quick Alerts
For Daily Alerts
Just In
மரத்துடன் பேசியவருக்கு சிறை தண்டனை!
கோவை:
தென்னை மரத்துடன் தனியாக நின்று "வசனம் பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை கணபதிப் பகுதியில் மாமரத்துத் தோட்டம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணி.இவர் அங்குள்ள ஒரு தென்னை மரத்துடன் ஏக வசனத்துடன் பேச்சு நடத்திக்கொண்டிருந்தார்.
மேலும், ஆபாசமான சில வார்த்தைகளைப் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாகவந்த போலீஸ் கான்ஸ்டபிள் பத்மநாபன் அவரை விசாரித்துள்ளார். அப்போதுஅவரையும் சேர்த்து திட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன், மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
இவர் மீது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, September 26, 2000, 5:30 [IST]