த.மா.கா. குழப்பம் ...பாண்டி சபாநாயகர் விளக்கம்
பாண்டிச்சேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த மனோகர் குழுவினர் தங்களை தனிபிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று இதுவரை கோரவில்லை என்று பாண்டிச்சேரிசட்டசபை சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
லண்டனில் நடந்த காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுதிங்கள்கிழமை இரவு அவர் பாண்டிச்சேரி திரும்பினார். செவ்வாய்க் கிழமைசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனோகர் தரப்பிலிருந்து எனக்கு வந்தகடிதத்தில், நாங்கள் தனிப்பிரிவாக செயல்படப் போகிறோம் என்று மட்டும்கூறியுள்ளனர். தங்களை தனிப் பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள்கோரவில்லை.
அவர்களது கடிதத்தை நான் பரிசீலனை செய்து வருகிறேன். தற்போதைய அரசியல்சூழ்நிலை குறித்து எனக்கு விளக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள சபாநாயகர்கள் மாநாட்டில்கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்துள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications