மதுரை, திருச்சி, நெல்லை கலெக்டர்களுக்கு விருது
சென்னை:
முதியோர் கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு(கலெக்டர்) விருதுகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு தொடர்கல்வி வாரியமும், மாநில பள்ளி சாராக்கல்வி கருவூலமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிசாரா மற்றும்முதியோர் கல்வி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்டம் மற்றும் தொண்டு நிறுவுனங்களுக்கு மால்கம் ஆதிசேஷையாவிருதுகளை வழங்கிவருகின்றன.
இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விபரங்களை பள்ளி சாரா மற்றும் முதியோர் கல்வி மாநில ஆதாரமையஇயக்குனர் ஜான்.ஏ.ஜோசப் அறிவித்துள்ளார்.
எழுத்தறிவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,
சமநிலைக் கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர் மூர்த்தி, எழுத்தறிவு திட்டத்தில் தீவிரமாகஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய மாவட்டம் திருநெல்வேலி
மாவட்ட ஆட்சியர் கீ.தனவேல் ஆகியோர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று மாவட்ட கலெக்டர்கள் தவிர தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய பல அதிகாரிகளுக்கும் சிறப்பு விருதுகள்வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் திருச்சி கலையரங்கத்தில் இன்றும் நாளையும் நடைபெறும். மாநில பள்ளிசாரா கல்விகருவூலத்தின் 23-வது ஆண்டு மாநில மாநாட்டில் வழங்கப்படுகிறது.