தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
டெல்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.எம்) தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தது. கேரளா,மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்தக் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்துவழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜனதாதளம் கட்சியின் பெயரையும், சின்னமான சக்கர சின்னத்தையும்தேர்தல் ஆணையம் முடக்கி வைத்து உத்தரவிட்டது. சரத் யாதவ் தலைமையிலானஐக்கிய ஜனதாதளத்திற்கு கர்நாடகத்தில் மாநிலக் கட்சி அந்தஸ்தும், தேவே கெளடாதலைமையிலான ஜனதாதளத்திற்கு கர்நாடகத்தில் பிராந்தியக் கட்சி அந்தஸ்தும்வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை டெல்லியில் நடந்த தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் இந்த முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் கில், பிற ஆணையர்களானகிருஷ்ண மூர்த்தி, லிங்டோ ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications