அழகிரி விவகாரம்: அதிகாரி மாற்றத்திற்கு டிரிப்யூனல் தடை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அழகிரியின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியைப் பணிமாற்றம் செய்யச் சொல்லி அரசு பிறப்பித்த உத்தரவை மாநில நிர்வாக தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.

சமீபத்தில் அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்துமதுரையில் பெரும் வன்முறை மூண்டது. அந்த சமயத்தில் அழகிரிக்கு வேண்டிய அதிகாரியான, மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்தொடர்பு அதிகாரியாக இருந்தவரான பாஸ்கரன் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டார்.

அரசு அவரை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றியது. 24 மணிநேரத்தில் திருவள்ளூரில் பணியில் சேரும்படியும் கேட்டுக் கொண்டது. இதை எதிர்த்துபாஸ்கரன் மாநில நிர்வாக டிரிப்யூனலில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், எனது பணிமாற்றத்தின்போது வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் பணிமாற்ற உத்தரவைநிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை விசாரித்த நீதிபதி அப்துல்வாகப் பாஸ்கரனின் பணிமாற்ற உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+