ரூ. 1 லட்சம் மோசடி .. அரசு அதிகாரிக்கு 30 மாதம் சிறை
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் அரசு அலுவலகத்தில் ரூ 1 லட்சம் கையாடல் செய்த அதிகாரிக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு ராஜவீதியில் வசித்து வருபவர் ராமநாதன். வயது 57. இவர் அங்குள்ள விவசாய பொறியியல் நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராகவேலை செய்து வந்தார்.
இவர், 1983 - 84 ம் ஆண்டில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளம், பயணப்படி, பண்டிகை முன்பணம் மற்றும் சில்லறை செலவினங்களின்பில்கள் தயாரித்து கையெழுத்துப் போட்டு பணம் மோசடி செய்திருக்கிறார் என்று தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
ராமநாதன் ரூ 1 லட்சத்து 18 ஆயிரம் மோசடி நடத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர்இவ்வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தஞ்சாவூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் கலியமூர்த்திகுற்றவாளியான ராமநாதனுக்கு 30 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ 48 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.