"கூட்டணியில் பா.ம.க. நீடிப்பது கருணாநிதியைப் பொறுத்தது
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடிப்பது முதல்வர் கருணாநிதி கையில் உள்ளது என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் உள்ளது தமிழக ராஜீவ் காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி. இதில் தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது.
இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி இதுகுறித்து விமர்சனம் எழுந்தது. இதை கருணாநிதி தலையிட்டு தீர்த்துவைக்காததால் அவர்மேல் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது வாஸ்தவம்தான்.
அதேபோல், பாண்டிச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் என் மேல் தாக்குதல் நடத்தினார்கள். இந்த இரண்டு சம்பவங்களாலும் பாட்டாளிமக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி தொடரும். ஆனால் திமுக விலிருந்து பிரிந்துவருவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிக்கொண்டு காங்கிரசும், தமிழ்மாநில காங்கிரசும் சேர்ந்து போட்டியிடலாம். ஆனால் திமுகஅல்லது அதிமுக வுடன் கூட்டணி சேராமல் தேர்தலில் அதிக இடங்களைப் பெற முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணியிலிருந்து விலக்கி விடுவார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அப்படியிருந்தால் அவர்கள் அதற்கானகாரணத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
பாண்டிச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் நான் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் பாண்டிச்சேரி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்மஞ்சினி உள்பட பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பல பாண்டிச்சேரி, கடலூரி, விழுப்புரம் உள்பட பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.இது குறித்து முழு விவரங்களையும் முதல்வர் கருணாநிதியிடம் சமர்பித்துள்ளோம். ஆனால் அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லைஎன்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.