For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒலிம்பிக் தோல்வி .. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் படுதோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் நல்லதிறமையுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கும் என்று மத்திய இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நாகர்கோவில் பாஜகநாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவருக்கு குமரி மாவட்ட பாஜக சார்பில்வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் கிடைத்துள்ள வெற்றியின் மூலம் குமரி மாவட்டத்திற்குஇந்த அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது.

இது குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது கட்சிக்கோ சொந்தமானதல்ல. இங்குள்ள அனைத்து மக்களுக்கும்சொந்தமான பதவி.

எனக்கு அளித்திருக்கும் இந்த பொறுப்பின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதைநடைமுறைப்படுத்த முயற்சிப்பேன். சாதி, மத இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உழைப்பதே என்கடமை.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் படுதோல்வி அடைந்துள்ளது வருத்தமளிக்கிறது.எதிர்காலத்தில் நல்ல திறமையுள்ள வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு அரசு எல்லா வகையிலும் ஊக்கம்அளிக்கும் என்றார் அவர்.

பின்னர் மண்டைக்காடு கோவிலுக்கு சென்று வழிபட்டார் அமைச்சர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X