இன்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புடின்
டெல்லி:
ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் 4 நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை மாலைடெல்லி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிப்பார். இந்த வரவேற்புக்குப்பிறகு மகாத்மா காந்தி சமாதியில் புடின் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்துவார்.
பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் ஹோட்டல் மெளர்யாஷெரட்டனில் பேச்சு நடத்துகிறார். செவ்வாய்க்கிழமை புடினுக்கு டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது.
புடினுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் சிறப்பு விருந்து ஒன்றையும் அளிக்கிறார்.புதன்கிழமை அவர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்.அதற்கு முன்பாக காலை புடினை, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திசந்தித்துப் பேசுகிறார்.
பிற்பகலுக்கு மேல் ஆக்ராவிற்குச் செல்கிறார் புடின். பின்னர் அங்கிருந்து மும்பைசெல்கிறார். அங்கு இந்தியத் தொழிலதிபர்களுடன் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின்னர் ரஷியாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
புடினின் இந்திய பயணத்தின்போது 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்கையெழுத்தாகவுள்ளன.
முன்னதாக தனது இந்திய பயணம் குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் புடின்பேசுகையில், இந்தியாவும், ரஷியாவும் நீண்ட கால தோழர்கள். இயல்பாகவே இருநாடுகளுக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாடவுன் நட்பு கொள்வதில்ரஷியா பெருமைப்படுகிறது.
இரு நாடுகளும் இணைந்து சர்வதேச அளவிலான தீவிரவாதத்தை ஒடுக்க பாடுபடும்.இரு நாடுகளுக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளால் பிரச்சினை உள்ளது. இதைஇருநாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ளலாம் என்றார்.