பெங்களூர் தமிழ்ச் சங்கத் தேர்தல்: புதிய அணி வெற்றி
பெங்களூர்:
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் புதிய தலைவராக க.சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து பதவிகளையும் இவரது அணியினரே கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது பெங்களூர் தமிழ்ச்சங்கம். இதற்கு மூல காரணமாக இருந்தவர் க. சுப்ரமணியம். இதையடுத்துஇரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
கடந்த முறை சண்முகவேலன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையின்கீழ் நிர்வாகத்தார் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகபுகார் எழுந்தது.
இந்நிலையில் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் திருச்சி அன்பரசுஆகியோர் பதவி விலகினர். இதையடுத்து சண்முகவேலன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதையடுத்து அக்டோபர் 1 ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. சங்கத்தை நிறுவிய க.சுப்ரமணியம் தலைமையில் ஒரு அணியும், பொற்செழியன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர்.
இதில், தலைவராக க. சுப்ரமணியம், துணைத்தலைவராக க. ஜெகந்நாதன், செயலாளராக இராசு.மாறன், பொருளாளராக திருச்சி அன்பரசு, துணைச்செயலாளராக தி.கோ. தாமோதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட க. சுப்ரமணியம் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில்,
தமிழ், இலக்கிய கலை பண்பாட்டை வளர்ப்பது, தமிழர்-கன்னடர் உறவை வளர்ப்பது ஆகிய நோக்கத்துடன் தமிழ் சங்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் சிலஆண்டுகளாகவே தமிழ்ச்சங்கம் தனது குறிக்கோளிலிருந்து விலகி விட்டது.
தமிழ்ச்சங்கம் இழந்த பெருமையை மீட்பதும், சங்க வளர்ச்சிக்குப் பாடுபடுதலுமே எங்கள் முன் உள்ள குறிக்கோள். தமிழர் தன்மானத்திற்குப் பங்கம்ஏற்படாதவாறு திருவள்ளுவர் சிலை திறக்க வழிசெய்வோம். விருப்பு, வெறுப்பின்றி அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications