5-வது முறையாக "படையெடுக்கிறார் கோபால்
பெங்களூர்:
வீரப்பன் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் புதன்கிழமைதொலைபேசியில் ஆலோசித்தனர். இந்த ஆலோசனை அரை மணி நேரம் நீடித்தது.
இதில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.
பலமுறை காட்டுக்குச் சென்ற கோபாலால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. தடா கைதிகள்விடுதலை, தமிழ் தீவிரவாதிகள் விடுதலையில் வீரப்பன் பிடிவாதமாக உள்ளதால் கோபாலால் ஏதும் செய்யமுடியவில்லை.
தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 11 தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.இதனால், இந்த விசாரணைக்குப் பின்னரே காட்டுக்குச் செல்ல கோபால் திட்டமிட்டிருந்தார்.
ஆனால, வீரப்பனின் அழைப்பின்பேரில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் காட்டுக்குச்சென்றுள்ளதாகக் கூறப்படுவதால், உடனடியாக கோபாலையும் அனுப்ப தமிழக, கர்நாடக அரசுகள்முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
இதன்படி வியாழக்கிழமை இரவு கோபால் மீண்டும் காட்டுக்குப் புறப்படுவார்.