For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபால் மீது ஆட்சேபமில்லை .. கர்நாடக எதிர்க்கட்சிகள்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு தொடர்பாக தற்போது எடுத்து வரும் நடவடிக்கையேபோதுமானது என்று பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து மாநில காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும்எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது, ராஜ்குமார் விவகாரத்தில் அரசு தற்போது எடுத்து வரும்நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். தற்போதுஎடுத்து வரும் நடவடிக்கையே போதுமானது. இதையே தொடரலாம் என்று அவர்கள்தெரிவித்தனர்.

மைசூர் தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில்அக்டோபர் 11-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதன் பின்னர் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

இன்னும் இரண்டு நாட்களில் கோபால் மீண்டும் காட்டுக்குச் செல்வார் என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களும் கோபால் தொடர்ந்து தனதுமுயற்சியைத் தொடரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு முதல்வர் கிருஷ்ணா டெல்லி செல்லும் நோக்கம் இல்லை என்றார்அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X