ஆயுத சப்ளை: இந்தியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம்
வாஷிங்டன்:
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ள இஸ்ரேல் முன் வந்துள்ளது. இது தொடர்பாக தன் நாட்டில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்களுக்கு இஸ்ரேல்வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் உள்பட பாதுகாப்பு உளவுப் பிரிவுகள் பலவற்றுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள பாதுகாப்புத் தொடர்பானசெய்திப் பத்திரிக்கை இத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை என்று இஸ்ரேல் முடிவு செய்திருந்தது. ஆனால், இப்போது அந்த முடிவை விலக்கிக் கொண்டு ஆயுதஒப்பந்தம் செய்து கொள்ள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள உள்நாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது.
இப் புதிய திட்டத்தின்படி தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுடனான ஆயுத விற்பனை மீண்டும் தொடங்கப்படும். அதாவது அடுத்த 5ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் சப்ளை செய்யும்.
ஐ.ஏ.என்.எஸ்.