தவறு செய்தது கருணாநிதி தான்- மூப்பனார்
சென்னை:
முதல்வர்தான் முதலில் என்னை கைவிட்டுப் போனார். தவறு செய்தது அவர்தான்என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையில் நடைபெற்றசமுதாய நல்லிணக்க விழாவில் அவர் பேசியதாவது:
மறைந்த அப்துல் சமதுவின் 75-வது பிறந்த நாள் விழா இங்கு சமுதாய நல்லிணக்கவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அரசியலில் எனக்கும் சமதுவுக்கும் பலசமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இருந்தபோதிலும், நாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நட்புடனே பழகினோம்.அவரது மறைவுக்குப் பின் அவரது கட்சியை நடத்தி வரும் காதர் முகைதீனுடனும் அந்தநட்பு தொடர்கிறது. இந்த நட்பு என்றென்றும் தொடரும். என் வாக்கை நான்காப்பாற்றுவேன்.
நெல்லை, தூத்துக்குடியில் நடந்த விழாக்களில் என்னை முதல்வர் கருணாநிதிகடுமையாக விமர்ச்சித்துப் பேசியுள்ளார். நான் அந்தப் பக்கம் போய்விட்டேன், இந்தப்பக்கம் போய்விட்டேன் என்று என் மீது அவர் தவறு சொல்கிறார்.
எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணம். முதலில் பிரிந்து போனது நானா? இல்லேயை.அவர்தான் என்னை கைவிட்டுப் போனார். தவறு செய்தது அவர்தான். அதை நான்சுட்டிக் காட்டினால், என் மீது அவருக்குக் கோபம் வருகிறது. எல்லாவற்றுக்கும்அவர்தான் பதில் சொல்லவேண்டும்.
1996-ம் ஆண்டு தேர்தலில் நானும், கருணாநிதியும் மற்றவர்களும் மதவாத சக்திகள்ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குத்தான் ஒன்று சேர்ந்தோம்.
மதவாதத்தை எதிர்ப்பது என்ற ஒரே கொள்கையில்தான் ஒன்று சேர்ந்தோம். ஆட்சிஅமைத்தோம். இதைச் சொன்னால் கலைஞருக்கு என் மீது கோபம்.
நரசிம்மராவுக்குக் கிடைக்கும் மரியாதைதான் எனக்குக் கிடைக்கும் என்றார் அவர்.எனக்கு எந்த மரியாதை கிடைத்தாலும் கிடைக்கட்டும். மதவாதத்தை எதிர்ப்பது என்றகொள்கையில் இருந்து பின் வாங்கமாட்டோம்.
எந்தச் சூழ்நிலையிலும் மதவாதம் தலைதூக்க விடமாட்டோம். சமுதாய ஒற்றுமைக்காகதமாகா தொடர்ந்து போராடும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications