ரேடியே வெங்கடேசனை விடுதலை செய்யவேண்டும்: தமிழ்நாடு விடுதலைப் படை மிரட்டல்
காஞ்சிபுரம்:
தடா கைதி ரேடியோ வெங்கடேசனை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று தமிழ்நாடுவிடுதலைப் படையினர் மிரட்டி உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர் ரேடியோ வெங்கடேசன். இவர் தடா கைதியாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார் வீரப்பன். அவரதுகோரிக்கைகளில் ஒன்று தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பதுதான்.
அந்த 5 தமிழ்த் தீவிரவாதிகளிகளில் ரேடியோ வெங்கடேசனும் ஒருவர். உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் விடுதலை தாமதமாகிக் கொண்டிருக்கிறஇந்நேரத்தில் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்திற்கு சனிக்கிழமை ஒரு கடிதம் வந்தது.
அதில் தடா கைதியாக உள்ள ரேடியோ வெங்கடேசனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காஞ்சிபுரம் ரயில்வே நிலையத்தைவெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம். மேலும் அதிக மானியம் கோரி ஊர்வலம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக்கொல்வோம் என்றும் எழுதியிருந்த கடிதத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை என்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக, காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் சோதனையிடப்பட்டது. ரயில் நிலையத்தைச் சுற்றி 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடிகுண்டு சோதனைநடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தீபாவளி வரை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications