தமிழ் தடா கைதிகள் விடுதலை வழக்கு: நாளை இறுதி விசாரணை
டெல்லி:
மைசூர் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகளை விடுவிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றத்தில்கர்நாடக அரசு நாளை வாதாட உள்ளது.
புதன்கிழமை (11-ம் தேதி) இந்த வக்கில் இறுதி விசாரணை நடக்கிறது.
இது குறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் சந்திரே கெளடா கூறுகையில், இவர்களின் விடுதலையில் தான்ராஜ்குமாரின் விடுதலையும் அடங்கியிருக்கிறது. இந்திய குற்றவியல் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 321-ன் கீழ்தடா கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
இதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி எங்களுக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற்றுவிடலாம் என நம்பிக்கையுடன்உள்ளோம். சிறையில் உள்ள 51 தமிழர்களும் வீரப்பனின் கூட்டாளிகளே அல்ல. அவர்கள் வீரப்பனுக்கு பீடிவாங்கிக் கொடுத்தவர்கள். அவ்வளவு தான் என்றார்.
வீரப்பன் கூட்டாளிகள் என்று கைது செய்யப்பட்ட 121 பேர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 70 பேர்ஜாமீனில் வந்துவிட்டனர். ஆனால், மீதமுள்ள 51 பேரும் ஜாமீனில் வர பணம் இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாகமைசூர் சிறையில் வாடி வருகின்றனர். இவர்கள் மீது இதுவரை விசாரணை கூட நடக்கவில்லை. இவர்களில் 12 பேர்பெண்கள். ஆண்களில் ஒருவருக்கு வயது 71.
இவர்களை விடுவிக்கக் கோரியும், விசாரணை நடத்தி இவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளா இல்லையா எனமுடிவு செய்யக் கோரியும் பல அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளை கர்நாடக அரசுகள் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
இப்போது ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு இவர்களை விடுவித்தால் தான் ராஜ்குமாரை விடுவிப்பேன்என்று வீரப்பன் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், வேறு வழியின்றி அவர்களை விடுவிக்க கர்நாடகம் முன் வந்தது.
ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இப்போது, தன்னால் கைது செய்யப்பட்டவர்களைவிடுவிக்கக் கோரி கர்நாடக அரசே நீதிமன்றத்தில் படியேறி போராடி வருகிறது.
இந்த வழக்கில் வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காக கர்நாடக சட்ட அமைச்சரும் டெல்லியிலேயே டேராபோட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான வழக்கறிஞர்களையும் அணி வகுத்து நிறுத்தியிருக்கிறது கர்நாடகம்.
முன்பு வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி கைது செய்தவர்களை, இப்போது வீரப்பனுக்கு பீடி வாங்கிக் கொடுத்ததுதவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது கர்நாடகம்.












Click it and Unblock the Notifications