இலங்கை பிரதமரைக் கொல்ல சதி
கொழும்பு:
இலங்கையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகேவை கொலை செய்ய முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, 3 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கை நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கானதேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.
சனிக்கிழமை டிலோரனா தொகுதியில் நடந்த ஆளும் மக்கள் கூட்டணியில் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமசிங்கே கலந்து கொண்டுபேசினார்.இதற்கிடையே, பிரதமரை ஒரு கும்பல் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார், பிரதமர் பேசும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகேயுள்ள மளிகைக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குவெடிமருந்து, 6 டெட்டனேட்டர்கள், பியுஸ் வயர்கள் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தக்க சமயத்தில் வெடி பொருட்களைப் பறிமுதல் செய்து விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரைக்கைது செய்ததால் பிரதமர் விக்ரமநாயகே உயிர்தப்பினார். இதைத்தொடர்ந்து பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.