நெடுமாறனுடன் காட்டுக்குச் சென்றார் கோபால்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் மற்றும் 2 பேருடன் நக்கீரன் கோபால் செவ்வாய்க்கிழமைசத்தியமங்கலம் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் 3 பேரும் கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டனர். இந்த நான்கு பேரையும்மீட்பதற்காக அரசுத்தூதர் கோபால் நான்கு முறை காட்டுக்குச் சென்றார்.
அவர் நான்காவது முறை பிணைக்கைதிகளை மீட்டு வரும் முயற்சியுடன் அவர் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, ராஜ்குமாரின் உதவியாளரும், உதவிடைரக்டருமான நாகப்பா, வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டார். இதைத்தொடர்ந்து கோபால் வெறுங்கையுடன் திரும்பினார். ஆனாலும் அரசுஅழைத்தால் 5 வது முறையும் காட்டுக்குச் செல்லத் தயார் என்று அறிவித்திருந்தார்.
இதற்கிடையே தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு கேசட் மூலம் வீரப்பன் அழைப்புவிடுத்திருந்தான். இதனால், ராஜ்குமாரை விரைவில் விடுவிப்பதற்காக கோபாலுடன், நெடுமாறனையும் சேர்த்து அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டது.ஏற்கனவே காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுத்தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. அவரை மாற்றுவதென்பதுநாகரீகமானதல்ல. அதனால் கோபாலுடன், நெடுமாறனையும் காட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை நெடுமாறன், விழுப்புரத்தைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி, மக்கள் சிவில் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த புதுவைசுகுமாரன் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
கோபாலுடன் செல்லும் புதிய குழு குறித்து திங்கள்கிழமை இரவு சென்னையில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அவர்களிடம்ராஜ்குமார் விடுதலைக்குத் தேவையான அனைத்து தஸ்தாவேஜுகளும் கொடுக்கப்பட்டன. இந்த புதிய குழுவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் சம்மதம்தெரிவித்தார்.
முன்னதாக, இதுகுறித்து பெங்களூரில் கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், அரசுத் தூதருடன் வேறு ஒருவரையும்காட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தடா கைதிகள் வழக்கு விடுதலை விசாரணைக்கு வருகிறது. சாதகமான தீர்ப்பு கிடைத்தால்பிணைக்கைதிகளை எளிதில் மீட்டு வந்து விடலாம் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.