வாடகை கேட்ட டெலிபோன் பூத் வாலிபர் கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

திருப்பூரில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட டெலிபோன் பூத் வாலிபர் குறித்துதுப்புத் துலங்கியது.

கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த இந்தக் கொலை தொடர்பாக இரண்டு பேரைப்போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஒரு டெலிபோன்பூத்தில், லோகநாதன் (22) என்பவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக போலீசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.இதுகுறித்த விவரம்:

ரியாஸ் என்பவர், திருப்பூர் காலேஜ் ரோட்டில் டெலிபோன் பூத் நடத்தி வந்தார். இந்தடெலிபோன் பூத் லோகநாதனுக்குச் சொந்தமானது. பூத்திற்கு தினமும் 100 ரூபாய்வாடகையாகத் தர லோகநாதனுடன் ரியாஸ் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் வாடகையை முறையாகத் செலுத்தவில்லை. இதனால் வாடகை பாக்கி ரூ.23,000 ஆக ஆனது. இந்நிலையில் ரியாஸ் மற்றும் அவரது மைத்துனர் இத்தாஹிர்அகமது ஆகியோர் லோகநாதனைச் சென்று சந்தித்தனர்.

லோகநாதனிடம் கடனாகத் தருமாறு பணம் கேட்டனர். ஆனால் பணம் கொடுக்கலோகநாதன் மறுத்தார். அதோடு, தனக்குத் தரவேண்டிய பணத்தையும் திருப்பிக்கேட்டார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரியாஸ்மற்றும் இத்தாஹீர் இருவரும் லோகநாதனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

தலைமறைவாக இருந்த இவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+