இலங்கை சிறையிலிருந்த 5 மீனவர்கள் மீட்பு
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த5 மீனவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம், ராஜேஷ் கண்ணன், ரவி சேகர்,கோவிந்தராஜ், ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் மீன் பிடித்சுக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட இவர்கள் பின்னர்இலங்கை கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் தற்போது விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் வந்த விமானம் திருவனந்தபுரத்திற்கு பிற்பகல் 3.45மணிக்கு வந்து சேர்ந்தது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரனின் உத்தரவுப்படி மீன்வளத்துறைஅதிகாரிகள் வரவேற்று மீனவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications