For Daily Alerts
Just In
மலேசியா: மனநோயாளி சுட்டுக் கொலை
கோலாலம்பூர்:
மலேசியாவில் பள்ளி மாணவனை கத்தி முனையில் பிணைக் கைதியாக வைத்திருந்த மனநோயாளியை போலீசார்சுட்டுக் கொன்றனர்.
தெற்கு ஜோகோர் மாகாணத்தில் குலுவோங் நகரில் சோங் ஆங்கில ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது.
தேவராஜா சுப்பையா (30) என்ற அந்த நபர் லியூ யோன் சின் என்ற 10 வயது சிறுவனைக் கடத்தி பள்ளியின் ஒருபக்கம் கொண்டு சென்றார். பின்னர் அந்த சிறுவனை கத்தியால் குத்தினார். இதில் அவனுக்கு மார்பில் காயம்ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.
அவரிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் உதவாததால் அவரை போலீசார் சுட்டனர். அவர் அங்கேயே சுருண்டுவிழுந்து இறந்தார்,
Comments
Story first published: Wednesday, October 11, 2000, 5:30 [IST]