வாஜ்பாய்க்கு "பிசியோதெரபி பயிற்சிகள் துவங்கின
மும்பை:
பிரதமர் வாஜ்பாயுக்கு மாற்று மூட்டு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆகிறது.அவர் இப்போது பிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிரதமருக்கு இடது காலில் வலி அதிகமாக இருந்ததால் மாற்று மூட்டு அறுவை சிகிச்சைசெய்யபப்ட்டது. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இபபோது அவர் முதற்கட்டபிசியோதெரபி பயிற்சிகளை செய்ய தயாராகி வருகிறார்.
பிரதமர் வாஜ்பாயுக்கு இடது காலில் வயோதிகம் காரணமாக ஆஸ்டியோஆர்த்தரைடிஸ் வந்தது. அவருக்கு வரும் டிசம்பர் மாதம் 76 வயதாகிறது.
காலில் உள்ள திசுக்களும், காலின் கீழ் பகுதியிலுள்ள எலும்புகளும், மேல்பகுதியிலுள்ள தொடையிலும் உள்ள மென் திசுக்களும் சேதமடைவதால் மூட்டுஎலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதி பாதிக்கப்பட்டவருக்கு மிகுந்த வலியைஏற்படுத்தும். இது போன்ற நோயினால் தான் வாஜ்பாய் அவதிப்பட்டு வந்தார்.
பிரதமரை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், மூட்டுக்கு எந்த விதமானபாதிப்பும் ஏற்படாத வகையில் மிதமான பிசியோதெரபி பயிற்சிகள் முதலில்அளிக்கப்படும் என்றனர்.
ஏற்கனவே, அறுவைச் சிகிச்சை நடந்த ஐந்தாவது நாள் முதல் வாஜ்பாய் நடக்கத்தொடங்குவார் என பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தராஜன்ரனவத் கூறியுள்ளார். முதலில் வாஜபாய் வாக்கர் கருவியின் உதவியுடன் நடப்பார்.பின் குச்சிகளின் உதவியுடன் நடப்பார். மூன்று அல்லது நான்கு மாதங்களில் அவர்சாதாரணமாக நடக்க ஆரம்பிப்பார் என்றும் ரனவத் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.