For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா சொத்து: ஏ.ஆர்.ரகுமானிடம் நாளை விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானிடம் வெள்ளிக்கிழமை குறுக்கு விசாரணைநடைபெறுகிறது.

டான்சி வழக்கு முடிவடைந்ததை அடுத்து முன்னாள் தல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைதீவிரமடைந்துள்ளது. இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.5 கோடிக்குசொத்துக்கள் சேர்த்ததாக சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 258 பேர்விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் 124 அரசு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய எதிர் தரப்பினருக்கு நீதிபதி அனுமதிவழங்கியுள்ளார்.

அதன்படி ஜெயலலிதாவின் சொத்துக்களை மதிப்பீடு செய்த முன்னாள் பொதுப்பணித் துறை பொறியாளர் பாஸ்கரனிடமும்வியாழக்கிழமை எதிர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.

அரசு தரப்பில் ஏற்கனவே சாட்சியம் அளத்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மாண்டலீன் சீனிவாசன், முன்னாள்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட 7 பேரிடமும் வெள்ளிக்கிழமை குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.

இதற்கான சம்மன் ரகுமான் உள்ளிட்ட 7 பேருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் ரகுமான் இசைக் கச்சேரி நடத்தினார். இதையடுத்து இவரும்சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X