வாஜ்பாயை சந்திக்க போட்டிபோடும் தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவனையில் தங்கியுள்ள பிரதமர்வாஜ்பாயை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள்,பொது மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

ஆனால், அவரைச் சந்தித்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. 7 மாடியில் உள்ள வாஜ்பாயை சந்தித்தஆயிரக்கணக்கானோர் முயற்சித்து வருகின்றனர்.

அவர்களுக்கு மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத்தும்பதில் சொல்லி அனுப்பி வருகின்றனர்.

வாஜ்பாய் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து நாடு முழுவதும் இருந்தும் தந்திகளும், ஈ-மெயில்களும் குவிந்துவருகின்றன.

வாஜ்பாய் முக்கிய அதிகாரிகளுடன் மட்டுமே தினமும் பேச்சு நடத்துகிறார். மற்றபடி வேறு யாரையும் அவர்சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மத்திய அமைச்சர்கள் அத்வானி, பிரமோத் மகாஜனை பிரதமர் சந்தித்தார். ஆனால்,சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே, மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்சந்திக்கவில்லை. அவர்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்துபோட்டுவிட்டுத் திரும்பினர்.

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு மட்டுமே பதில் சொன்ன வாஜ்பாய், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசின் தொலைபேசி அழைப்புக்குக் கூட பதில் சொல்லவில்லை.

அதே நேரத்தில் கோப்புகளில் கையெழுத்திடுவது, புலனாய்வு அமைப்புகள் தரும் தகவல்களைப் படிப்பது போன்றபிரதமரின் தினசரி கடமைகளை மருத்துவமனை படுக்கையிலிருந்தே மேற்கொண்டு வருகிறார்.

பத்திரிக்கைகளையும் படித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+