குடும்பத் தகராறில் 13 பேரைக் கொன்றவர் தானும் தற்கொலை
ஷாங்காய் (சீனா):
குடும்பத்தகராறில் உறவினர்கள் 13 பேரைக் கொன்ற 40 வயது நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சீனாவில், இந்த கொலை வெறிச் சம்பவம் நடந்துள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சீனாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக 7 நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், ஜியா என்ற 40 வயதுநபர், கொலை வெறியில், தனது மனைவி, இரண்டு மகன்கள், அப்பா, மாமியார் மற்றும் உறவினர்கள் உள்பட 10 பேரைக் கொலை செய்தார்.
அதன் பின்னும் கொலை வெறி அடங்காமல் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மூன்று உறவினர்களைக் கொன்றார். இத்தனை பேரையும்எப்படிக் கொன்றார், என்ன பிரச்சினை காரணமாக கொன்றார் என்பது தெரியவில்லை.
ஜியாவின் கிராமத்தினர் கூறுகையில், ஜியா மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர். சின்ன, சின்ன விஷயங்களுக்குக் கூட பழி வாங்கத் துடிப்பார்என்றனர்.
ஏற்கனவே, ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு 1998 ம் ஆண்டுதான் ஜியா விடுதலை செய்யப்பட்டர் என்பதுகுறிப்பிடத்தக்கது.