தயாராகிறது பிரான்சின் முதல் இந்துக் கோவில்
பாரீஸ்:
பிரான்சின் முதல் இந்துக் கோவிலை அமைக்க கிரிகானியில் உள்ள இந்தியர்கள்நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாரீசுக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிரிகானி என்ற சிறுநகரில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வாழ்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
இங்கு 200 இந்தியர்கள் இணைந்து சனாதன தர்ம கழகம் என்ற பெயரில் அமைப்புஒன்றை அமைத்து, நிதி திரட்டி இந்து கோயில் ஒன்றை அமைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, கிரிகானில் 600 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில்450 பேர் பாண்டிச்சேரியிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் குடிபெயர்ந்து வந்தவர்கள்ஆவர்.
பிரான்சில் வாழ்ந்து வரும் ராஜாராம் மோகன் என்பவர் கிரிகின் வாழ் தமிழர்களின்தலைவராக திகழ்கிறார். மோகன் கூறுகையில், எனது முக்கிய குறிக்கோள் இந்தியமக்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதுதான்.பாண்டிச்சேரியிலிருந்து வந்த பெரும்பாலோனோர் ஏழைகள். அவர்கள் மிகவும்கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இங்கு சாதாரண பணிகள்செய்து வருகிறார்கள். அவர்கள் உதவி என்று எதையும் பிரான்ஸ் அரசிடமிருந்து பெறமுடிவதில்லை.
தாங்கள் இங்கு தனிமையில் விடப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதக்கூடாது.உதவிக்காக வேறு யாரிடமும் உதவி கேட்டு கையேந்தி நிற்கக்கூடாது. அவர்கள்அனைவரையும் ஒன்று படுத்துவதற்கு இந்து கோயில் அமைப்பதும் ஒரு வழியாகும்.இந்தக் கோயில் வழிபாட்டுத்தலமாக மட்டும் விளங்காது. இங்கு பல கலைநிகழ்சிகளும் நடத்தப்படும்.
சனாதன தர்ம கழகம் கடந்த வாரம் இந்து முறைப்படி பூஜைகள் செய்துதொடங்கப்பட்டது. பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும்அப்போது நடத்தப்பட்டன.
பலரும் இங்கு கோவில் கட்டுவது மிக கடினமான காரியம் என எண்ணுகிறார்கள்.ஏனென்றால் கோவில் கட்டுவது குறித்து இதுவரை பிரான்சு அதிகாரிகளிடமிருந்துஅனுமதி பெறவில்லை. அவர்களிடமிருந்து கோவில் கட்ட அனுமதி பெறுவதுகடினமானது என்பது தெரியும். இருந்தாலும் கோவில் கட்டுவதற்காக போராடுவோம்.போராடி அனுமதி பெறுவோம் எனக் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications