For Daily Alerts
Just In
நெடுமாறன் பயணம் தேவையில்லாதது .. கம்யூ.
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை அனுப்பியதன் மூலம் இந்தப் பிரச்சினை அரசியலாக மாறும் வாய்ப்புஏற்பட்டு விட்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்நல்லகண்ணு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை தூதராகக் காட்டுக்குச் சென்று வந்தகோபால் அரசியல் சார்பற்றவர். எனவே எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால்நெடுமாறன் அரசியலில் இருப்பவர். எனவே இது அரசியல் சாயம் பூசப்படலாம்.
நெடுமாறன் சென்றுள்ளதால், தமிழக அரசுக்குப் பின்னாளில் பிரச்சினைகள் எழலாம்என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Friday, October 13, 2000, 5:30 [IST]